Tuesday, February 28, 2012

Unit -1-Alternative Medicine and Therapies

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. உயர்பதவி வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். அதேபோன்று குழந்தைச் செல்வங்கள்தான் நாளைய உலகை வழி நடாத்துபவர்கள். நோயற்ற குழந்தைகள்தான் கல்வியிலும் மார்க்கத்திலும் உயர்ந்து நின்று சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றிட முடியும். மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு பரீட்சைக் கூடமாகிய இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு இக்கட்டுரை உங்களுக்கு உதவிபுரியும் என்ற நன்னோக்கோடு தொகுக்கப்பட்டுள்ளது.

எனவே எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு இன்னும் மது, மாது போன்ற தீயவைகளைவிட்டும் நம்மை விலகியிருக்கச் சொல்லி வருமுன் காக்கும் யுக்தியை ஆன்மீக நிழலின் கீழ் எடுத்துரைத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டுகிறது இஸ்லாம்.

நோய்களும் அதற்கெதிரான போராட்டமும்
நோய்களை வென்று மரணத்தை முறியடிப்போம் என்று மருத்துவ உலகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தினமும் புதுப்புது வியாதிகள் முளைத்த வண்ணமாய் இருக்கின்றன. இன்னும் மனிதன் மூப்படைவதை தடுத்து நோயில் தத்தளிக்கும் முதியவர்களை, "என்றும் 16" ஆக்குவோம் என்று அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரில் இயங்கும் "க்ரானோஸ்", இன்னும் கேம்ப்பிரிட்ஜ்'ன் "சென்ட்டா ஜெனடிக்கஸ்", போன்ற ஆயுள் ஆய்வு மையங்கள் அறைகூவல் விடுக்கின்றன. மேலும் "ஸ்டெம் செல்"களை கண்டறிந்து உடலியல் குறைபாடுகளைக் களைவோம் என்று மரபியல் ஆய்வாளர்களும் மார்தட்டிக் கொள்ளத்தான் செய்கின்றனர். என்றாலும் இந்த நவீன உலகில் தோன்றும் புதுப் புது நோய்கள் அவர்களைத் திகிலடையச் செய்யாமலில்லை. எழுபதுகளில் 54ஆக இருந்த இந்திய ஆயுள் சராசரி விகிதம் தற்போது 64ஆக உயர்ந்துள்ளது என்னவோ உண்மைதான். என்றாலும் இது ஒரு ஆரோக்கிய வாழ்வின் சான்று என்று எடுத்துக்கொள்ள இயலாது. இதைத்தான் மனித ஆர்வலர் நெல்லை சு.முத்து இப்படிக் கூறுகிறார். "தொற்று நோய்களைத் தோற்கடித்தோம் அதனால் நீண்ட நாள் வாழ முடிகிறது. இது கிருமிகளுக்கு எதிரான போராட்டமே யன்றி மூப்புக்கு எதிரான வெற்றியல்ல" என்று. (நன்றி : தினமணி 15-02-2005). ஆக நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?!

வருமுன் காப்போம்!
நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த M.B.B.S. மருத்துவர்கள் எல்லாம் இன்று Traffic Police-களைப் போன்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து சிறப்பு மருத்துவர்களை பரிந்துரைக்கும் வழிகாட்டிகளைப் போன்றும்தான் செயல்படுகின்றனர். அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேதம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தீராத மூட்டு நோய்க்கு நிரந்தரத் தீர்வு, மூன்றே மாதங்களில் மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஆண்மைக் குறைவை நீக்க அவசர சிகிச்சை போன்ற பயமுறுத்தும் பத்திரிக்கை விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருந்துகளை உண்ணாதீர்கள் அதில் பக்கவிளைவுகள் அதிகம் என்ற பத்திரிக்கை உபதேசங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஆரோக்கிய வாழ்வை நாடும் நம் உள்ளங்களில் எழும் கேள்வி நோயற்ற வாழ்விற்கு வழிதான் என்ன? என்பதுதான்.

ஆரோக்கிய வாழ்வின் அவசியத் தேவைகள்
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நம் உடல் இயக்கம் பற்றிய தெளிவு நமக்கு ஓரளவிற்கு அவசியம். தொழில் துறையில் முன்னேறிவிட்ட இந்த இயந்திர உலகத்தில் மனிதன் சுவாசிக்கும் காற்றிலிருந்து குடிக்கும் குடிநீர்வரை எல்லாம் சுகாதாரமற்றதாகவே இருக்கின்றது. மேலும் நவீன இயந்திரங்களும் தானியங்கிகளும், கணினியும், மோட்டார் வாகனங்களும் நமது உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்துவிட்டன. என்றாலும் நமது வசதியைக் கருதி சுவைமிக்க வகைவகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றோம். உடல் உழைப்பும், உட்கொள்ளும் உணவும் சரிசமமாய் அமைய வேண்டும் என்ற உடலியக்கச் சூட்சுமம் நமக்குத் தெரிவதேயில்லை. உட்கொள்ளும் உணவைவிட உடல் உழைப்பு குறையும் போது மேல் மிச்ச உணவுகள் உடலில் கொழுப்பாக படிந்துவிடுகின்றன. விளைவு.. இரத்த அழுத்த நோய், இதய நோய், புற்று நோய், இரைப்பை புண், நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு மனிதன் இரையாகின்றான். இத்தகைய நோய்கள் கிருமிகள் மூலமாக பரவுவதில்லை. மாறாக மனிதன் தானாகவே தேடிக்கொள்ளும் வியாதிகள். மொத்தத்தில் நோயற்ற வாழ்விற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை உடற்பயிற்சியும் நல்ல உணவுப் பழக்கமும்தான். எனவே இவ்விரண்டையும் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் நோக்கம் உடலை வலிமைப் படுத்துவது மட்டும்தான் என நினைக்கின்றோம். அது உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் "பளு" தூக்குவதும், "தண்டால்" எடுப்பதும்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றாட வீட்டுச் சாமான்களை நாமே சென்று வாங்கிவருவது, ஐவேளைத் தொழுகைகளை நடந்தே சென்று தொழுவது. சைக்கிள் பயணம், நீச்சல் போன்றவைகள் அனைத்துமே ஒரு வகை உடற்பயிற்சிதான். என்றாலும் இவை முழுப்பலனையும் தராது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.

மெல்லோட்டத்தின் (Jogging) பயன்கள்
மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.


1) நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
2) கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
4) இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
7) கை, கால்களில் விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாத வாறு உரத்த ஆடைகளை அணிவது நல்லது.
9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
10) 30 நிமிட மெல்லோட்டத்திற்குப் பின் தசைகள் மற்றும் உறுப்புக்களை தளர்வடையச் செய்யும் Callisthanic Exercise பத்து நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை வலிகள் ஏற்படாது.
11) நாள்தோரும் மெல்லோட்டம் செல்ல வேண்டும்.
12) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது.

உணவும், உடற் பருமனும்

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) அறிக்கையின் படி உலகம் முழுவதும் 100 கோடி பேர் அளவுக்கதிகமான எடையுடையோர்கள், 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர், 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49% பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர் (நன்றி : தினமணி, 09-03-2005)

பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும் இந்த உடற் பருமனால் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்த நோய், மாரடைப்பு, சில வகைப் புற்று நோய்கள், Type - 2 வகை நீரிழிவு நோய், கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.

தேவை சரிவிகித உணவு

உணவின் ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பல உணவுகளைக் கலந்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்து உணவை சரிவிகித உணவு எனலாம். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத் திறன் (கலோரி)"ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள் (Fast Food) , ஐஸ் கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு (Refined Foods) களையும், வெள்ளை மைதா போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட (Processed Food) களையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணையை பல முறை உபயோகப்படுத்தக் கூடாது.

சமையல் எண்ணை ஓர் தெளிவு
சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)
2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)

இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!


 

 

ஆயுர்வேத வைத்திய முறைகள்



“வாழ்க்கையின் விஞ்ஞானம்” என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
 வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.
 இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச் சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர் வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன. நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.
 நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர் வேதம் பிறப்பு.


புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியான சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே சரக சம்ஹிதை என்று அழைக்கப்படுகிறது.
 ஆயுர்சேத நூல்களில் மற்றொரு மிகச்சிறந்த நூலாகத் திதழ்கிறது. சுஷ்ருதரால் இயற்றப்பட்ட “சஷ்ருத சம்ஹிதை”. புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்-இப்படித் தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.


 இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர் வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.
 கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?


அப்யங்க ஸ்வேதனா
 மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல -ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.


பிழிச்சில்
 ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலிமற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சனைகள் இந்க சிகிச்சையால் விலகும்.


தாரா
 ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷசமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்.... போன்று பல்வேறு நன்மைகளும் இந்க சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நசரக்கிழி
 பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்னை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்கப்பட்ட நோய்களும் குணமாகின்றன.


நஸ்யம்
 இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரதத ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன். பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.


உதவர்த்தனம்
 இது மசாஜ் முறையிலான சிகிச்சை, மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்பபடுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.
 - வருடம் முழுவதும் உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக் கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.
 இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.



 

Yoga and Naturopathy



யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ¦cஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.

அறிவியல் கலை

யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்திபெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும்.

யோகக் கலை

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாதது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை கல்வி பயில்வதற்கு எழுத்து எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.

சிவயோகம்

இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பேரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்து கலை என்பதும் தொ¢ந்தே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிநெறியாளர்களே.

பாதார விந்தத்தை அடைதல்

சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பெருமான் தன் இனம் பிராயத்தில் இந்தியாவிற்கு வந்து இந்த யோகக் கலையைப் பயின்று சென்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

"தன் அறைகளை (ஐம்பொறிகளை) அடைத்துக்கொண்டு என்னை அந்தரங்கத்தில் தேடுகிறவன் கண்டடைவான்" என்று அவரது உபதேசமும் மலையில் அவர் 40 நாள் உண்ணாது உறங்காது யோக நிலையில் அமர்ந்து ஞான நிலையை அடைந்து (சித்தி பெற்று) அப்பால் அவர் ஆற்றிய மலைப பிரசங்கத்தின் மாண்பும் ஏற்ற எடுத்துக்காட்டாகும் என்று இயம்புகின்றனர். யோக நிலையைப் பற்றியும் இறைவனுடைய பாதாரவிந்தத்தை யோகம் மூலம் எளிதில் அடையாளம் என்பதையும் விளக்கித் தமிழில் சைவ சமய நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சைவ நூல்கள் யோக நிலைக்குச் சிறப்பான இடத்தை அளித்துள்ளன.

யோக முறை

யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும் உள்ளுறுப்புகள்தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்

தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.

உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

சாதராணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்குத் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை பு¡¢கிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன் மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

உடல் அவயவங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையின் இருந்திட வழி அமைகிறது.

தோல், நரம்பு, மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆசனப் பயிற்சிகள் உரமூட்டுகின்றன.

"மூளைக்குப் போதிய பிராணவாயு கிடைக்காவிட்டால் படபடப்பும் பதைபதைப்பு உணர்வும் எழுச்சியும் உண்டாவதோடு உடல் அமைப்பையும் மாற்றி, செயல்களையும் சின்னாபின்னாப்படுத்துவதுடன் நோயுற்றவராகவும் ஆக்கிவிடுகிறது." என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இந்தப் பிராணவாயுவின் பெருமைகள் எல்லாம் நம்முடைய பிராணாயாமம் என்பதில் அடங்கியுள்ளது. உடலுக்குள்ளே பிராணவாயு என்கிற உயிர்க் காற்றைச் சேர்த்து வைத்து, பேராண்மைமிக்க சக்தியினைப் பெருக்கும் வழிதான் பிராணாயாமம் என்றனர்.

 

Naturopathy



உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு வரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவமுறையை நாடுகின்றனர். சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ என்னும் புதிய மருத்துவமுறை, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
இயற்கை மருத்துவம் என்றால்…? தாவரங்கள் ஊசி போடுமா…? மரங்கள் மருந்து தடவுமா…? என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம். ஆனால் இயற்கை மருத்துவத்தின் தார்பாரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னை களைச்சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.
மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தார்பாரியங்களும்  புதிதாக, புதிராக இருக்கலாம். ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.
நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது தாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான். அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் காரணமாக இயற்கையே வெல்லமுடியும்’ என்கிற ஆசையும்,நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன. மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப்  போனான்
இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.
தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம்புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.
விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வாகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம்  பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.
இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.
தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது. இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.
உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?
மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.
இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையட்ட உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.
உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.
பெருவாழ்வு ரகசியம்
நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும். பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டுவாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.
ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.
மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.
முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்
ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்
பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்
மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்
மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது. இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.
உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், ஆவியில் வேகவைத்து உண்டால் நீண்ட நாள் வாழலாம். ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம்.
நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது. இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும்

UNANI MEDICINE


யுனானி கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.

[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில்காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான Phlegm (Balgham), குருதி (Dam), Yellow bile(Safra), Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது.

[2]அரபு இந்துஸ்தானி, பாரசீக உருது மொழிகளில் கிரேக்கம் எனப் பொருள். இது சிறிய ஆசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான லோனியா என்பதில் மருவியதாகும். யுனானி வைத்திய முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறதாயினும் யுனானி வைத்தியம் பற்றி சிதறிக்கிடந்த தகவல்கள் பாரசீகரான அக்கீம்

யுனானி மருத்துவம், அதன் பெயரின் மூலம் கிரீஸ் நாட்டில் இருந்து தோன்றியது என தெரிகிறது. அரபு மொழியில் யுனான் என்ற சொல்லுக்கு கிரீஸ் என்று அர்த்தம். அச்சொல்லே பிறகு யுனானி என்று வழங்கலாயிற்று.

கிரேக்க தத்துவஞானியும் மருத்துவருமான ஹிப்போகிரேட்ஸ் (அரபு மொழியில் புக்ராத்) கி.மு. 460-377, ஆதாரமற்ற மாயையான மருத்துவ முறையை மாற்றி புதிய அறிவியற்பூர்வமான முறையைக் கொண்டு வந்தார். யுனானி மருத்துவத்தின் ஆதாரப்பூர்வ முறையானது ஹிப்போகிரேட்ஸின் தத்துவமே ஆகும்.

ஹிப்போகிரேட்ஸுக்கு பிறகு எண்ணற்ற பண்டிதர்கள் யுனானி மருத்துவத்தை கவனிக்கத்தக்க சிறப்படையச் செய்தனர். அவர்களில் காளென் (அரபு மொழியில் ஜாலினெஸ் கி.பி. 131-210) என்பவர் நல்ல அடித்தளம் அமைக்க உதவினார். ராசஸ் (அரபு மொழியில் அல்ரசி) கி.பி. 850-925, அவிசென்னா (அரபு மொழியில் இப்பன் - சினா கி.பி. 980-1037) போன்ற அரபு மற்றும் பெர்சிய மருத்துவர்கள் யுனானி மருத்துவம் சிறப்பாக வளர உதவினார்கள்.

காளென் யுனானி முறை மருத்துவத்தை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்து வைத்தியம் பார்த்து வந்தார். எகிப்து நாட்டின் அரசவை மருத்துவராக பதவி வகித்தார். எகிப்து நாட்டு அரசரின் ஆதரவில் இருந்தபொழுது ஏறக்குறைய அனைத்து வியாதிகளுக்கும் நுற்றுக்கணக்கான புதிய மருந்துகளை கண்டுபிடித்தார்.

ஒரே காலத்தில் எகிப்து, சிரியா, பெர்சியா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவமாக யுனானி மருத்துவம் இருந்துள்ளது. எனவேதான் கிரேக்க அரபு மருத்துவம், அயனியன் மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கிழக்கத்திய மருத்துவம் என பல பெயர்களை யுனானி மருத்துவம் பெற்றது.

நன்கு வேரூன்ருவதற்கு முன்பே யுனானி மருத்துவம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டில்லி சுல்தான்கள், கில்ஜிக்கள், துக்ளக்கள் மற்றும் முகலாய மன்னர்கள் பண்டிதர்களுக்கு ஆதரவு அளித்தனர். சிலரை அரசு ஊழியர்களாகவும், அரசவை மருத்துவர்களாகவும் நியமித்தனர். இம்முறை வெகுவிரைவில் நல்ல ஆதரவு பெற்று நாடு முழுவதும் பரவியது.

13 மற்றும் 17ம் நூற்றாண்டின்போது யுனானி மருத்துவம், இந்தியாவில் மிகவும் செழிப்பானது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் யுனானி மருத்துவம் அரசர்களின் ஆதரவை இழந்தது. ஆனால் மக்களின் நம்பிக்கையால் பழக்கத்தில் இருந்து வந்தது. பிரபல மருத்துவரும், யுனானி பண்டிதருமான ஹக்கீம் அஜ்மல் கான் (1868-1927) இம் முறை இந்தியாவிற்கு வர பெரிதும் காரணமாக இருந்தார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் யுனானி மருத்துவம் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு இம்முறையை இந்தியாவில் மேலும் செழிப்புறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்காச்சோளக் கதிர் மருத்துவம்: யுனானி முறை

நாம் உணவாகப் பயன்படுத்தும் மக்காச் சோளம் தவிர அக்கதிரின் ஜடைநார், சக்கை ஆகியவை மகத்தான மருத்துவக் குணம் கொண்டவை என யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பின் வியப்பூட்டும் விந்தைச் செய்திகளைப் படித்துப் பயன்பெறுங்களேன்.


மக்காச்சோள விதை:

இதை உணவாகப் பயன்படுத்த யுனானி மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தாய்ப்பால் பெருகும். மக்காச்சோள கஞ்சி சீதபேதியைக் குணப்படுத்தும்.


மக்காச்சோளக் கதிர்ஜடை நார்:

சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிராம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால்

1 .சிறுநீரகவலி

2. சிறுநீர் அடைப்பு

3. சிறுநீர்ப்பாதைப்புண்

4. வீக்கம் குணமடையும்

5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்

6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:

1. இதய நோய்கள்

2. இந்திரியப்பை புண், வீக்கம்

3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்

4. பித்தப்பை கற்கள்

5. மஞ்சள் காமாலை

6. கல்லீரல் வீக்கம்

7. கல்லீரல் செயலிழப்பு

8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்



மக்காச் சோளக் கதிர் சக்கை:

விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.
சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,

1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.

2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,

1. இருமல் நீங்குகிறது

2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது

3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்


ஹோமியோபதி


ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி, ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.

1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும், ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது. ஹானிமன் இன்றும் வாழ்கிறார்!

ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும் இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கென தனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப் பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின் கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில், தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம்.

இஞ்செக்ஷன், ஆபரேஷன், விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப் பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.



1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலைவெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும்,ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள்மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும்போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சிலமருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.

ஹானிமன் இன்றும் வாழ்கிறார்! ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும்இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கெனதனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப்பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்குஆபத்து ஏற்பட்டு வருகிறது.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாகமருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்பமறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில்இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


 

Siddha Medicine


சித்த மருத்துவம்
மருத்துவம்

சித்த மருத்துவம் தமிழ் மண்ணில் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் நாகரீகம், பண்பாடு, கலை, ஞானம் போன்றவற்றில் வேரூன்றி தமிழர்களின் உணர்வில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்ற மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும்.

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலும் கி.மு 4500 லிருந்து 1600 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்களிலும் சரபேந்திரர் சித்த மருத்துவச்சுடர் என்னும் ஏட்டுச் சுவடிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் சங்ககால தமிழ் இலக்கியங்களிலும் சித்த மருத்துவம் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைகாண முடிகிறது. இவ்வாதாரங்களை அறிஞர் பெருமக்கள் பலரும் பல் வேறு நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறிப்பாக மேலைநாட்டு நாகரீகம் தோன்றுவதற்கு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்அதாவது துலாபாரயுகம் இரணடாயிரத்து ஒன்பதுக்கு (நூந்று தொன்னூற்று ஐந்து கோடியே ஐம்பத்து நூறாயிரத்து ஏழுபத்து மூன்று) முன் தன்னிகரில்லா சித்த மருத்துவம் தோன்றியதாக வரையறுக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவமானது திராவிடர் மருத்துவம், தமிழர் மருத்துவம், செந்தமிழ் மருத்துவம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வரலாற்று வல்லுநர்களின் கூற்றுப்படி உலகிலுள்ள அனைத்து பிரிவினர்களிலும் முந்தியவர்களாக விளங்குகின்ற திராவிடர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் திராவிடர் மருத்துவம் என அழைக்கப்படுகிறது.

மனித உயிரினம் முதன் முதலில் தோன்றிய இடமான குமரிக்கண்டம் தான் தமிழர்களின் தாயகம் என்பது வரலாற்று உண்மை. இத்தொல்குடி மக்களாகிய தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் தமிழர் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது .

உலக மொழிகளில் முதன் முதலில் செம்மையுள்ள மொழி தமிழ் மொழி ஆகும். சித்தர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை செய்கின்ற சித்தமருத்துவத்தை பாடல் உருவிலும் மக்கள் நன்கறிந்த செந்தமிழிலும் வழங்கியதால் இம்மருத்துவம் செந்தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.

உலக உயிரினங்களின் இன்னல்களை நீக்க அயராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெளிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும், உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற ஒரு மருத்துவ முறையைத் தந்தவர்கள் சித்தர்கள் என்பதால் இது சித்த மருத்துவம் என்று கூறப்படுகின்றது.

உலக மருத்துவ முறைகளுக்கெல்லாம் மூல மருத்துவமாகவும், மரபு வழி மருத்துவத்திற்கு மணி மகுடமாகவும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன்தோன்றி ய மூத்த குடி மக்களாகிய ஆதிகாலத்தில் வாழ்ந்த திராவிடர்களின் சொந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் என்பதில் எவர்க்கும் ஐயமில்லை.

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும


சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை தொகை சரக்கு முறை (திரிகடுகு திரிபலா திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.


Physiotherapy

பிடித்து விடுதல், உடற்பயிற்சி ஆகிய முறைகளில் பிணி தீர்க்கும் முறை

மேலும் அறியப்படுகிறது பிசியோதெரபி உடல் சிகிச்சை உடல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு கலை மற்றும் அறிவியல் ஆகும். நவீன உடல் சிகிச்சை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் நிறுவப்பட்டது. விரைவில் பின்வரும் அமெரிக்க எலும்பியல் அறுவை சிகிச்சை ஊனமுற்ற குழந்தைகள் சிகிச்சை தொடங்கின மற்றும் உடல் கல்வி, மசாஜ், மற்றும் மாற்று பயிற்சியில் பயிற்சி பெற்ற பெண்கள் பயன்படுத்த தொடங்கினார். இந்த சிகிச்சைகள் 1916 என்ற போலியோ நோய் போது பயன்படுத்தப்படும் மேலும் உயர்த்தப்பட்டனர். போது முதல் உலக போர் பெண்கள் வேலை மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு உடல் செயல்பாடு மீண்டும் வேலைக்கு இருந்தது, மற்றும் உடல் சிகிச்சை துறையில் அமைப்பு இருந்தது. 1918 ஆம் ஆண்டு கால "புனரமைப்பு உதவியாளர்" உடல் சிகிச்சை பயிற்சி தனிநபர்கள் குறிக்க பயன்படுத்தப்பட்டது. உடல் சிகிச்சை முதல் பள்ளி வாஷிங்டன் DC இல் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் நிறுவப்பட்டது முதலாம் உலக போர் வெடித்தபோது பின்வரும்

உடல் சிகிச்சை, மதிப்பிடுதல் கண்டறிய, மற்றும் நோய்கள், குறைபாடுகள், மற்றும் உடல் பொருள் பயன்படுத்தி குறைபாடுகள் ஒரு வகையான சிகிச்சை அடங்கும். இது பிசியோதெரபிஸ்ட்கள் தனிநபர்கள் மற்றும் பராமரிக்க மற்றும் அதிகபட்ச இயக்கம் மற்றும் ஆயுள்காலம் முழுவதும் செயல்படும் திறனை மீண்டும் உருவாக்க மக்களுக்கு சேவைகளை வழங்குவதன் மூலம், ஒரு முதன்மை நல சுகாதார தொழிலாக உள்ளது. இந்த இயக்கம் மற்றும் செயல்பாடு வயதான, காயம், நோய் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் மிரட்டல் எங்கே சூழ்நிலையில் சேவைகளை உள்ளடக்குகிறது. இது சாம்ராஜ்யத்திற்கு வழக்கமான மருந்து க்குள் கருதப்படுகிறது. அது பொதுவாக உடல் மருத்துவர்கள் நடைமுறையில் இருந்தாலும், சில பணிகளை பயிற்சி உதவியாளர்கள் அல்லது சுகாதார நிபுணர்கள் பிற வகையான ஒதுக்கப்படும் இருக்கலாம்.
உடல் சிகிச்சை அடையாளம் மற்றும் பதவி உயர்வு, தடுப்பு, சிகிச்சை / தலையீடு, habilitation மற்றும் மறுவாழ்வு கோளங்கள் உள்ள வாழ்க்கை மற்றும் இயக்கம் சாத்தியமான தரத்தை அதிகரிக்கவும் அக்கறை உள்ளது. இந்த உடல், உளவியல் உணர்ச்சி, மற்றும் சமூக நலம் உட்கொண்டிருக்கிறது. இது நோயாளியின் நிலை ஒரு மதிப்பாய்வு தொடங்குகிறது. இந்த மதிப்பீட்டை பொதுவாக ஒரு மருத்துவ வரலாறு ஆய்வு மற்றும் ஒரு உடல் பரிசோதனை உள்ளடக்குகிறது. உடல் தேர்வு நோக்கம் கருதப்படுகிறது போது பெரும்பாலும், மருத்துவ வரலாறு ஆய்வு, ஒரு தற்சார்புடைய பரிசோதனை கருதப்படுகிறது. இரண்டு கூறுகள் வெற்றிகரமாக ஆய்வு மற்றும் நோயாளி சிகிச்சை முக்கியமான உள்ளன. மதிப்பீட்டு நிலை, சில சந்தர்ப்பங்களில், சிறந்த நோயாளியின் நிலை மதிப்பீடு மற்றும் திறன் மிக்க சிகிச்சை திட்டம் உருவாக்க கண்டறியும் சோதனைகள் தொடர்புடையதாக இருக்கலாம்

acupressure



மூளை-முதுகுத்தண்டு இவையெல்லாம் இணைந்ததே உடலின் நரம்பு மண்டலம். இந்த நரம்புகள் இல்லாத இடமே இல்லை. சூழ்நிலை மற்றும் உணவிலுள்ள நச்சுத்தன்மை மூலம் பலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது. இந்த நச்சுத் தன்மை கல்லீரலில் (Liver) மற்றும் நரம்புகளில் சேர்ந்து தேவையற்ற மன இறுக்கத்தை (Stress) ஏற்படுத்தி விடும்.



இதன் காரணமாக நரம்புத் தளர்ச்சியும் மனநோயும் ஏற்பட்டு மனத்தின் சமநலை கெட்டு மனச்சோர்வு உண்டாகிறது. மனஇயல், மனோதத்துவ சிகிச்சை பலன் அளிக்காது. ஏனென்றால், இது மனத்தின் சமநிலையை பாதிப்பதுடன் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் உடலில் சமநிலையையும் பாதித்து விடுகிறது.



நரம்புகளின் கடைசிப் பகுதியை அக்கு (Acu) என்பார்கள். இதற்குக் கொடுக்கக் கூடிய அழுத்தம்தான் அக்கு பிரஷர். இந்த நரம்புகளில் அழுத்தம் கொடுக்கப்படும்பொழுது உடலில் உள்ள நச்சுத்தன்மை (Toxins) வெளியேறி விடும்.



மற்ற உடற்பயிற்சிகள் என்பது வெளிப்புற உறுப்புகளை (External organs) சீர்செய்வதற்கானப் பயிற்சியாகும். ஆனால் உடலுக்குள்ளாக இருக்கின்ற உறுப்புகளுக்கு (Internal organs) உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. உள்ளுறுப்புகளுக்கு அக்கு பிரஷர் என்ற முறையில் தான் பயிற்சி அளிக்க முடியும். எனவே, உடல் நலமாக இருக்க வெளிப்புற உறுப்புகள் மற்றும் உட்புற உறுப்புகள் இரண்டுக்கும் பயிற்சி அவசியமானதால் உடற்பயிற்சியையும் அக்கு பிரஷரையும் சேர்த்தே செய்ய வேண்டும்.



நமது உடலில் மெரிடியன் (Meridian) என்ற நரம்புகள் எல்லா இடத்திலும் உறுப்புகளில் உள்ளன. இந்த நரம்புகளில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் ஆற்றலானது அலையியக்கமாக நரம்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று தடையை நீக்கும். இந்த முறை பின்பு “அக்குபஞ்சர்” என்று ஆகி, ஊசிகளை நரம்புகளில் செலுத்தி அங்கு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி மருத்துவம் செய்யும் முறையாக வந்தது.



உடலிலுள்ள உயிராற்றல் இயங்கும் பாதையிலுள்ள மையங்களின் மீது கைவிரலால் அழுத்தம் கொடுக்கம்போது தனக்குள்ள பலவீனங்களை நோய்களை, தானே உள்நோக்கி, காலம் கடப்பதற்கு முன்பே உணரக்கூடிய அளவிற்கு உதவுகிறது. இந்த நிலையில் பழகப் பழக தனது உடல் நலத்தைத் தானே முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.



பலவீனத்தின் மூலகாரணத்தை அறிய அக்குபிரஷர் பயிற்சி உதவுகிறது. இப்பயிற்சி தடுப்பு மருத்துவ முறையிலும் பயன்படுகிறது. நோய் தீவிரமாகும் முன்பே பயிற்சியாளருக்கு நோயின் தன்மையை உணர்த்திவிடும். எடுத்துக் காட்டாக புற்றுநோய் உடலில் தோன்றி தீவிரமடைந்து வெளிப்படுவதற்கு நீண்டகாலமாகும். ஆனால், அக்குபிரஷர் மூலமாக நோய் வருமுன்பாகவே தவிர்த்திடலாம்.



இந்தப் பயிற்சியில் முக்கியமாக 14 மையங்கள் (Centres) உள்ளன. இந்த 14 மையங்களில் முதலிடம் கழுத்தின் பின்புறம் அதாவது, நமது இடக்கை விரல்கள் மூன்று, வலப்புறமாகச் சென்று கழுத்துக்குப் பின்னால் மூன்றாவது கழுத்து எலும்பினைப் பயிற்சி முடியும் வரை அழுத்திப் பிடித்தவாறு இருக்க வேண்டும். எப்படி என்றால் வீணை, கிட்டார் வாசிக்கும்போது நமது இடக்கை மூன்று விரல்களைக் கொண்டு மீட்டிக் கொண்டே இருப்பது போல் கழுத்தின் பின்புறம், அழுத்தியவாறு இருக்க வேண்டும். நமது மூளையின் அமைப்பு, முகுளத்தின் அமைப்பு, தண்டுவடத்தின் அமைப்பு, எல்லாமே ஒன்று சேர்ந்து இருக்குமிடம் இதுதான்.



இந்த இடத்தில் நரம்புகள் ஒன்றுகூடி பின்பு உடலுக்குள் இருபக்கமும் மூன்று ஜோடியாகப் பிரிந்து ஒவ்வொரு உறுப்பிற்கும் செல்கிறது. மீதி உள்ள மற்ற அக்குபிரஷர் உள்ள இடங்கள் நமது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ளன. இது முக்கியமான இடம். காரணம் என்னவென்றால் உடலியக்கத்திற்குத் தேவையான சில முக்கிய உறுப்புகள் வயிற்றுப் பகுதியில் உள்ளன.



வயிற்றில் தொப்புள் பகுதியைச் சுற்றி முக்கியமான உறுப்புகளான குடல்கள், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகளுடன் நாளமில்லாச் சுரப்பிகளான கணையம், அட்ரீனல், பால் சுரப்பிகள் போன்றவைகளும் உள்ளன. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் முதலியனவற்றை தடுக்கும் உறுப்புகள். இந்த உறுப்புகளைத் தூண்டி சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு இதனோடு தொடர்புள்ள மெரிடியன் நரம்புகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.



இந்தப் பயிற்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த மையங்களில் விரலால் அழுத்துகின்றோமோ அந்தப் பகுதியல் நமது மனத்தையும் குவிக்க வேண்டும். மனம் அலையுமானால் மீண்டும் பயிற்சியை முதலிலிருந்து தொடங்க வேண்டும். பயிற்சியை மெதுவாகச் செய்வது நல்லது. மனம் ஒருமைப்படாமல் பயிற்சி செய்வது முழு பலனைத் தராது.



உடலை அழுத்துதல் (Acu-pressure) பயிற்சியின் நன்மைகள்:

1.உடலில் மின்சாரத் தடை நீங்கி, மின்சார ஓட்டம் சீரமைகிறது.
2.நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது.
3.வயிற்றில் உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. வலிமை பெறுகின்றன.
4.இரத்த அழுத்த நோய் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது.


Hydrotherapy is the use of water to revitalize, maintain, and restore health






Water therapy is literally the treatment or relief the body receives in the daily consumption of water rather than medication. 65% of the human body consists of water. It seems a smart choice to replenish water that is lost through the day with new refreshing water yet lots of people barely replenish 1 / 2 of the water lost. Lots of people count the bottles of soda or juice as water substitute however they are poor substitutes. A lot of diseases and issues we cope with are due to poor diet so why wouldn’t you add water for your diet as water is a vital element of your body’s make-up

Water is really a nutrition, a vital supplement to keep body functions, still water is neglected, we’ve under-estimated the Therapy health benefits of drinking and taking advantage of water. A number of our health troubles are there because our body is struggling for water to hold its basic functions.
Water may be the second most important dependence on living being after air. Water therapy that we’ll go through here isn’t actually a therapy but a concept for thoughtful and purposeful utilization of water in our everyday life and find out amazing health benefits from it our-self.
Today we attempt to retain and keep health by consuming multi-vitamin and multi-mineral tablets plus a number of products available for sale. We use these products because scientific researches show that our basic food neglects to provide all the nutrition in optimum quantity which are required by our body to remain healthy.
 
Water Therapy For Health

Water Therapy Benefits

Arthritis: Joint spaces are full of some fluid (synovial fluid) which works as a lubricant, preventing friction during movements. A sufficient water intake supplies sufficient fluid towards the joint, enhancing its shock-absorbing effect. Without it cushioning effect, the ends from the bones would rub against one another, get rough and inflamed, an ailment known as arthritis. This results in a lot of pain, difficulty in movement and, sometimes, stiffness. Good intake of water, among other things, helps to relieve this pain

ELECTROTHERAPHY










RELAXATION TECHNIC








I Am Relaxed

 

 

THE HISTORY OF ACUPUNCTURE

The oldest known book on Chinese medicine is the "Neiching", also known as "The Yellow Emperor's classic of internal medicine". It is written in the form of a dialogue between the Yellow Emperor "Huang Ti" and "Chi Po" a Taoist teacher and physician. It is believed that the Yellow Emperor lived around 2700 B.C. The book indicates that acupuncture was widely practiced in China much before the time it was written.

During archaeological excavations in China, various types of gold and silver acupuncture needles were found in the tomb of Prince Liu Sheng who died around 200 B.C. This confirms that these different types of needles were in use over two thousand years ago.

THE SPREAD OF ACUPUNCTURE
Acupuncture originated in the cold north-west parts of China where herbs and other medical remedies were scarce. Acupuncture spread from there to other parts of the world through travelling physicians, scholars and pilgrims.

One of these was a famous Chinese physician called Pien Chueh who lived around 400 B.C. While visiting the province of Quo with some of his students, he arrived at a town there the people seemed very sad since their beloved prince had suddenly become unconscious. His doctors had been unable to revive him and it seemed that he was going to die.

Hearing that Pien Chueh was a great physician, the people asked him if there was anything he could do to help their prince. Pien Chueh agreed to examine the prince. Arrangements were made and he was received by the king, who willingly allowed him to examine the unconscious prince.

Pein Chueh made a thorough examination of the prince and arrived at a diagnosis. He treated the prince with acupuncture who soon regained consciousness. Pein Chueh continued to treat the prince with acupuncture, heat treatment (moxibuxtion) and various herbs till the prince recovered completely. It is said that the king rewarded him richly and directed the physicians in his Court to learn acupuncture and thus the practice of acupuncture spread.






Physical therapy



(or physiotherapy), often abbreviated PT, is a health care profession primarily concerned with the remediation of impairments and disabilities and the promotion of mobility, functional ability, quality of life and movement potential through examination, evaluation, diagnosis and physical intervention carried out by licensed Physical Therapists (known as Physiotherapists in some countries) and Physical Therapist Assistants (known as Physical Rehabilitation Therapists in some countries). In addition to clinical practice, other activities encompassed in the physical therapy profession include research, education, consultation and administration. Definitions and licensing requirements in the United States vary among jurisdictions, as each state has enacted its own physical therapy practice act defining the profession within its jurisdiction, but the American Physical Therapy Association (APTA) has also drafted a model definition in order to limit this variation, and the APTA is also responsible for accrediting physical therapy education curricula throughout the United States of America. In many settings, physical therapy services may be provided alongside, or in conjunction with, occupational therapy and speech therapy services


Hydrotherapy,



formerly called hydropathy, involves the use of water for pain-relief and treating illness. The term hydrotherapy itself is synonymous with the term water cure as it was originally marketed by practitioners and promoters in the 19th century. A hydrotherapist therefore, is someone who practices hydrotherapy.

Water cure has since come to have two opposing definitions, which can cause confusion.

(a) Water cure therapy – a course of medical treatment by hydrotherapy
(b) water cure torture – a form of torture in which a person is forced to drink large quantities of water.[1]
The sense used in this article is the first one, synonymous with the term hydrotherapy, and which precedes recorded use of the second sense.[a]

Hydrotherapy in general encompases a range of approaches and their definitions. These range from approaches and definitions which are either naturally distinct, or made so for marketing purposes, to approaches and definitions which overlap significantly, and which can be difficult to disentangle.

One such overlap pertains to spas. According to the International SPA Association (ISPA), hydrotherapy has long been a staple in European spas. It is the generic term for water therapies using jets, underwater massage and mineral baths (e.g. balneotherapy, Iodine-Grine therapy, Kneipp treatments, Scotch hose, Swiss shower, thalassotherapy) and others. It also can mean a whirlpool bath, hot Roman bath, hot tub, Jacuzzi, cold plunge and mineral bath. These treatments use physical water properties, such as temperature and pressure, for therapeutic purposes, to stimulate blood circulation and treat the symptoms of certain diseases.[2]


Historical background

Various forms of hydrotherapy have been recorded in ancient Egyptian, Greek and Roman civilizations.[3][4][5][6][7] Egyptian royalty bathed with essential oils and flowers, while Romans had communal public baths for their citizens. Hippocrates prescribed bathing in spring water for sickness. Other cultures noted for a long history of hydrotherapy include China and Japan,[4] this latter being centred primarily around Japanese hot springs, or (onsen). Many such histories predate the Roman thermae.

After an apparent oblivion during the Middle Ages, hydrotherapy was rediscovered during the 18th and 19th centuries by people such as J.S.Hahn, MD, (1696–1773),[8] Vincent Priessnitz (1799–1851),[5] Professor E.F.C. Oertel (1764–1850),[9][10] and J.H. Rausse (1805–1848).[11][12]

In the 19th century, a popular revival followed the application of hydrotherapy around 1829, by Priessnitz, a peasant farmer in Gräfenberg, then part of the Austrian Empire.[5][13][14][15] This revival was continued by a Bavarian priest, Sebastian Kneipp (1821–1897), "an able and enthusiastic follower" of Priessnitz, "whose work he took up where Priessnitz left it",[16] after he read a treatise on the cold water cure.[17][18] In Wörishofen (south Germany), Kneipp developed the systematic and controlled application of hydrotherapy for the support of medical treatment that was delivered only by doctors at that time. Kneipp's own book My Water Cure was published in 1886 with many subsequent editions, and translated into many languages.

A significant factor in the popular revival of hydrotherapy was that it could be practised relatively cheaply at home. The growth of hydrotherapy (or 'hydropathy' to use the name of the time), was thus partly derived from two interacting spheres: "the hydro and the home".


 

Electrotherapy



is the use of electrical energy as a medical treatment[1] In medicine, the term electrotherapy can apply to a variety of treatments, including the use of electrical devices such as deep brain stimulators for neurological disease. The term has also been applied specifically to the use of electric current to speed wound healing. Additionally, the term "electrotherapy" or "electromagnetic therapy" has also been applied to a range of alternative medical devices and treatments.

History

During 1855 Guillaume Duchenne, the developer of electrotherapy, announced that alternating was superior to direct current for electrotherapeutic triggering of muscle contractions.[3] What he called the 'warming affect' of direct currents irritated the skin, since, at voltage strengths needed for muscle contractions, they cause the skin to blister (at the anode) and pit (at the cathode). Furthermore, with DC each contraction required the current to be stopped and restarted. Moreover alternating current could produce strong muscle contractions regardless of the condition of the muscle, whereas DC-induced contractions were strong if the muscle was strong, and weak if the muscle was weak.

Since that time almost all rehabilitation involving muscle contraction has been done with a symmetrical rectangular biphasic waveform. During the 1940s, however, the US War Department, investigating the application of electrical stimulation not just to retard and prevent atrophy but to restore muscle mass and strength, employed what was termed galvanic exercise on the atrophied hands of patients who had an ulnar nerve lesion from surgery upon a wound.[4] These Galvanic exercises employed a monophasic wave form, direct current - electrochemistry.



It has not been found to be effective in increasing bone healing.



Current useAlthough a 1999 meta-analysis found that electrotherapy could speed the healing of wounds,[5] during 2000 the Dutch Medical Council found that although it was widely used, there was insufficient evidence for its benefits.[6] Since that time, a few publications have emerged that seem to support its efficacy, but data is still scarce.[7]

The use of electrotherapy has been researched and accepted in the field of rehabilitation[8] (electrical muscle stimulation). The American Physical Therapy Association acknowledges the use of Electrotherapy for:[9]

1. Pain management

Improves range of joint movement
2. Treatment of neuromuscular dysfunction

Improvement of strength
Improvement of motor control
Retards muscle atrophy
Improvement of local blood flow
3. Improves range of joint mobility

Induces repeated stretching of contracted, shortened soft tissues
4. Tissue repair

Enhances microcirculation and protein synthesis to heal wounds
Restores integrity of connective and dermal tissues
5. Acute and chronic edema

Accelerates absorption rate
Affects blood vessel permeability
Increases mobility of proteins, blood cells and lymphatic flow
6. Peripheral blood flow

Induces arterial, venous and lymphatic flow
7. Iontophoresis

Delivery of pharmacological agents
8. Urine and fecal incontinence

Affects pelvic floor musculature to reduce pelvic pain and strengthen musculature
Treatment may lead to complete continence
Electrotherapy is used for relaxation of muscle spasms, prevention and retardation of disuse atrophy, increase of local blood circulation, muscle rehabilitation and re-education electrical muscle stimulation, maintaining and increasing range of motion, management of chronic and intractable pain, post-traumatic acute pain, post surgical acute pain, immediate post-surgical stimulation of muscles to prevent venous thrombosis, wound healing and drug delivery.[citation needed]

Some of the treatment effectiveness mechanisms are little understood, with effectiveness and best practices for their use still anecdotal.

Electrotherapy devices have been studied in the treatment of chronic wounds and pressure ulcers. A 1999 meta-analysis of published trials found some evidence that electrotherapy could speed the healing of such wounds, though it was unclear which devices were most effective and which types of wounds were most likely to benefit.[5] However, a more detailed review by the Cochrane Library found no evidence that electromagnetic therapy, a subset of electrotherapy, was effective in healing pressure ulcers[10] or venous stasis ulcers


 

Massage



is the working of superficial and deeper layers of muscle and connective tissue using various techniques, to enhance function, aid in the healing process, and promote relaxation and well-being.[1][2] The word comes from the French massage "friction of kneading", or from Arabic massa meaning "to touch, feel or handle" or from Latin massa meaning "mass, dough",[3][4] cf. Greek verb μάσσω (massō) "to handle, touch, to work with the hands, to knead dough".[5] In distinction the ancient Greek word for massage was anatripsis,[6] and the Latin was frictio.

Massage involves working and acting on the body with pressure – structured, unstructured, stationary, or moving – tension, motion, or vibration, done manually or with mechanical aids. Target tissues may include muscles, tendons, ligaments, fascia, skin, joints, or other connective tissue, as well as lymphatic vessels, or organs of the gastrointestinal system. Massage can be applied with the hands, fingers, elbows, knees, forearm, and feet. There are over eighty different recognized massage modalities.[7] The most cited reasons for introducing massage as therapy have been client demand and perceived clinical effectiveness.[8]

In professional settings massage involves the client being treated while lying on a massage table, sitting in a massage chair, or lying on a mat on the floor. The massage subject may be fully or partly unclothed. Parts of the body may be covered with towels or sheets. Those who practice massage as a career are referred to as massage therapists.[citation needed] Most states in the US have licensing requirements for massage therapists.


A relaxation technique


(also known as relaxation training) is any method, process, procedure, or activity that helps a person to relax; to attain a state of increased calmness; or otherwise reduce levels of anxiety, stress or anger. Relaxation techniques are often employed as one element of a wider stress management program and can decrease muscle tension, lower the blood pressure and slow heart and breath rates, among other health benefits.[1]

People respond to stress in different ways, namely, by becoming overwhelmed, depressed or both.[2] Yoga and other techniques that include deep breathing tend to calm people who are overwhelmed by stress, while rhythmic exercise improves the mental and physical health of those who are depressed. People who encounter both symptoms simultaneously, feeling depressed in some ways and overexcited in others, may do best by walking or performing yoga techniques that are focused on strength.[2]

Shiatsu is a kind of bodywork designed to promote health and wellbeing - distinguish from Shih Tzu - a breed of Japanese dog



Shiatsu





is Japanese for "finger pressure;" it is a type of alternative medicine consisting of finger and palm pressure, stretches, and other massage techniques. There is no scientific evidence proving that shiatsu can treat any disease,[1][2] but shiatsu practitioners promote it as a way to help people relax and cope with issues such as stress, muscle pain, nausea, anxiety, and depression. There are two main Shiatsu schools: one incorporating elements of western anatomical and physiological theory, and the other based on Traditional Chinese Medicine (TCM). Shiatsu is traditionally performed on a futon mat, with clients fully clothed.

Japanese style foot massage "Shiatsu" is a hands-on therapy technique originating in Japan .Shiatsu means “finger pressure” .Shiatsu is popular as home care among Japanese long long time ago. Shiatsu is the application of pressure to a specific area of the body that has pain. Shiatsu massage give for a variety of ailments, respiratory problems, digestive problems, headaches and leg cramps, and can bring relief to a number of everyday disorders. The shiatsu massager uses palms, fingers, thumbs, knuckles, elbows, knees and the feet, to work on the body’s acupuncture points, along what they consider the body’s meridians or energy channels. Its is a safe and effective preventive medicine. Shiatsu helps to balance a persons energy flow, and strengthen the vital organs. This site explains a Japanese-style Shiatsu foot massage techniques by Japanese shiatsu therapist, Reflexology foot charts. You can do a Japanese-style foot massage Shiatsu easily at home.Let's try

HistoryShiatsu

( (指圧?) Japanese from shi, meaning finger, and atsu, meaning pressure), as well as Teate (手当て?, pronounced te-a-te) originated in Japan. There were many hands-on therapies called Teate before traditional Chinese therapies such as Acupuncture and Tuina (called Anma in Japan) were introduced to Japan around 1000AD. The practice of this massage was a semi-mystical activity performed by women and the blind. The term shiatsu may have been first cited in a 1915 book, Tenpaku Tamai's Shiatsu Ryoho.


நோன்பு என்றால் என்ன?

அந்த நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? நோன்பு என்றால் என்ன? என்ற கேள்விகள் நம்மிலே பலருக்கும் எழலாம்.
நோன்பு என்றால் என்ன? என்பதற்கு மனோ இச்சைகளை கட்டுப்படுத்துதல், இறையச்சத்தை ஏற்படுத்துதல் என்று பலரும் அது தரும் பயன்கைளைத்தான் விளக்கிக் கொண்டே போவார்கள்.
கேள்வி விளக்கமல்ல, அதன் உண்மையான பொருள் என்ன எனபதை தெரிவதற் காகத்தான்!
அப்படிக் கேட்டால் உண்ணமால் இருப்பது என்று விளக்கம் சொல்வார்கள். நோன்பு என்றால் உண்ணமால் இருப்பது தான் அதன் பொருளா? அப்படியானால் போராட்டம் நடத்துபவர்கள் உண்ணா நோன்பு, உண்ணா விரதம் என்று கூறுகிறார்களே


Therapeutic touch


(commonly shortened to "TT"), also known as Non-Contact Therapeutic Touch (NCTT),[1] is an energy therapy which practitioners claim promotes healing and reduces pain and anxiety. Practitioners of therapeutic touch state that by placing their hands on, or near, a patient, they are able to detect and manipulate the patient's energy field.[2] One highly cited study, designed by nine year old Emily Rosa and published in the Journal of the American Medical Association found that practitioners of therapeutic touch could not detect the presence or absence of a hand placed a few inches above theirs when their vision was obstructed.[3][4][5] Simon Singh and Edzard Ernst concluded in their 2008 book Trick or Treatment that "the energy field was probably nothing more than a figment in the imaginations of the healers."


UNIT - 2


A mud bath


is a bath of mud, commonly from areas where hot spring water can combine with volcanic ash. Mud baths have existed for thousands of years, and can be found now in high-end spas in many countries of the world.

Mud baths come from many sources
lakes
saltwater sea
hot springs
mud volcano
Mud baths in the United States are mostly found at the resorts in California and Miami Beach, Florida. The mud is a combination of local volcanic ash, imported Canadian peat and naturally heated mineral waters. Historically, the mud bath treatment has been used for centuries in Eastern and Western European spas as a way to relieve arthritis.

No comments:

Post a Comment